Crime

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல் கோட்டை மாவட்டத்தில் உள்ள விநாயக் நகரை சேர்ந்தவர் சங்கீதா சிக்கேரி (37). பெண் வழக்கறிஞரான இவருக்கும் அவரது உறவினரான மஹந்தேஷ் சோலாசகுட்டாவுக்கும் வீடு விற்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

கடந்த சனிக்கிழமை பாகல்கோட்டை மார்க்கெட் பகுதியில் சங்கீதாவுக்கும் மஹந்தேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மஹந்தேஷ் சங்கீதாவை சரமாரியாக தாக்கினார். அதை பார்த்தும் பொதுமக்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QaPF1Bn

Post a Comment

0 Comments