Crime

பெரும்பாக்கம்: சென்னை பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (34). இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே சுந்தரமூர்த்தி நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் அவரை கத்தியால் சரமாரி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

தகவலறிந்து சென்ற பெரும்பாக்கம் போலீஸார் உடலை கைப்பற்றி பரி சோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SzHwn0P

Post a Comment

0 Comments