Crime

திருச்சி: சிங்கப்பூர், துபாய், சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 3.432 கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்த தனியார் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும், விமானத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது விமானத்தின் இருக்கைகளுக்கு இடையே கேட்பாரற்று கிடந்த ரூ.75.71 லட்சம் மதிப்பிலான 1.450 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ojPRbgG

Post a Comment

0 Comments