Crime

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 500 விவசாயிகளுக்கு சொந்தமான 2,117 ஏக்கர் விவசாய நிலங்களை தனிநபருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த புகாரின் பேரில் சார் பதிவாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.

தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம்பண்ணை ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான 2,117 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு இந்த நிலங்கள் அனைத்தும், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரே தனி நபருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WRs3hIN

Post a Comment

0 Comments