
பொன்னேரி: மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் இரு ரவுடிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள வாயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஒற்றை கை மூர்த்தி என்கிற மூர்த்தி (38). இவர் மீது 3 கொலை உட்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் வாயலூர் அருகே திருவெள்ளைவாயல் பகுதியில் அரசு மதுபானக் கடை அருகே பார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TJwKl3B
0 Comments