Crime

நாகர்கோவில்: கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்தவர் தங்கவேலு. கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக உள்ளார். நாகர்கோவில் புன்னை நகரைச் சேர்ந்த சிவகுரு குற்றாலம் என்பவர், நிலம் வாங்குவதற்காக ரூ.1.50 கோடியை ஒருவரிடம் கொடுத்ததாகவும், பணத்தை வாங்கியவர் நிலத்தைஎழுதித் தரவில்லை என்றும், மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இவ்வழக்கை முடித்து கொடுக்க டிஎஸ்பி தங்கவேலு ரூ.15 லட்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து, சிவகுரு குற்றாலம் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி ரூ.5 லட்சத்தை நேற்று முன்தினம் மாலை எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து, டிஎஸ்பியிடம் சிவகுரு குற்றாலம் வழங்கினார். அப்போது டிஎஸ்பி தங்கவேலுவை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mEoiewf

Post a Comment

0 Comments