
கடலூர் மாவட்டம் வேப்பூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகவுண்டர் மனைவி பட்டாத்தாள் (75). இவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில், அருகில் வசிக்கும் அவரது மகள் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 6-ம் தேதி தாயை பார்க்க வந்தபோது, பட்டத்தாள் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகியி ருந்தன.
புகாரின் பேரில் வேப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துநடத்திய விசாரணையில், மூதாட்டிஅணிந்திருந்த நகை அதே பகுதி யில் உள்ள அடகுக் கடையில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பிடித்த போலீஸார், அந்த நகையைஅடகு வைத்த நபரை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்தபோது, அவர் மூதாட்டி வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் சூர்யா (21) என்பவருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Wow7yVl
0 Comments