
சென்னை: தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் என்.ஆர்.பாலாஜி (46). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ‘பருப்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். நண்பர் மூலம் திருவல்லிக்கேணி, பழனியப்பன் கோயில் வடக்கு 3-வது தெருவை சேர்ந்த பாண்டியராஜன்(44) என்பவர் அறிமுகமானார்.
அவர், பெண் உட்பட மேலும் 4 பேருடன் இணைந்து ‘கிஷான் ரேஷன் ஷாப்’ என்ற ரேஷன் கடை போன்ற கடைகளை ஆரம்பித்து விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து அதைச் சில்லறை விற்பனை செய்யப்போவதாகவும், மொத்த வியாபாரிகளிடமிருந்து பருப்பு போன்ற பொருட்களைக் கொள்முதல் செய்ய உள்ளதாகவும் என்னிடம் கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uTqm7AN
0 Comments