Crime

கோவை: கார் கதவை திடீரென திறந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வாகன உரிமையாளருக்கு கோவையில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் சிறப்பு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை செல்வபுரத்தை அடுத்த குமாரபாளையம் நேருகாலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). இவர் செல்வபுரம் முத்துமாரியம்மன் கோயில் அருகே கடந்த 2015 ஜூன் 6-ம் தேதி சைக்கிளில் சென்றார். அவருக்கு முன்னால்சென்ற காரின் கதவை அதன் ஓட்டுநரான செல்வபுரத்தைச் சேர்ந்த பிரமோத் (25), திடீரென திறந்துள்ளார். காரின் கதவு மோதிய தில் சுப்பிரமணியனின் தலையில் எலும்புமுறிவு மற்றும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BdC9ENu

Post a Comment

0 Comments