
கரூர்: கரூர் மாவட்டம் நெரூர் தென்பாகம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி மகன் டேவிட் தீனா(22). இவருக்கு பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவியுடன் கடந்த ஓராண்டுக்கு முன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதன்பின், அவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து டேவிட்தீனாவை நேற்று கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4FJIiao
0 Comments