
புதுச்சேரி: புதுச்சேரியில் கடைக்கு பொருட் கள் வாங்கச் சென்ற நரிக்குறவ சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வியாபாரியை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த சங்கர் லால் (42). இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி உருளை யன்பேட்டை சுப்பையா நகரில் மனைவி, குழந்தைகளுடன் குடியேறி வசித்து வருகிறார். இவர் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் சொந்தமாக ஃபேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இந்த கடையில் நரிக்குறவர் பெண்கள் ஊசி மணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக வாங்கிபஸ் நிலையம் மற்றும் கடற்கரை சாலை பகுதியில் விற்பது வழக் கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/08uzyAM
0 Comments