
தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.
நல்லம்பள்ளி வட்டம் ஜருகு (மானியதஅள்ளி) பகுதியில் தொப்பூர் போலீஸார் நேற்று முன் தினம் மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜருகு ஏரிக்கரை அருகே ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக நடமாடுவதை பார்த்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் மானியத அள்ளி அடுத்த மேற்கத்தியான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெருமாள்சாமி (36) என்பதும், ஏரிக்கரை பகுதியில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. எனவே, அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/f7ThbJa
0 Comments