
கூடா நட்புக்கு இடையூறாக இருப்பதாக ஒன்றரை வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற தாய் கைது செய்யப்பட்டார். விஷம் கொடுக்கப்பட்ட மற்றொரு மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மார்த்தாண்டம் அருகே குளக்கஞ்சி கோவில்விளையைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி ஜெகதீஷ் (36). இவரது மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு சஞ்சனா (4) என்ற மகளும், ஒன்றரை வயதில் சரண் என்ற மகனும் இருந்தனர். நேற்று முன்தினம் ஜெகதீஷ் வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகளுடன் வீட்டில் இருந்த கார்த்திகா, குழந்தை சரணுக்கு உடல்நிலை சரியில்லை என கணவருக்கு போன் செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/q5hHmFP
0 Comments