Crime

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் அருகே மடத்தூர் - சோரீஸ்புரம் சாலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணிஅளவில் நின்றுகொண்டிருந்த2 இளைஞர்களை, காரில் வந்த 5 பேர் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன.

தூத்துக்குடி - பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சுமோ காரை, பொட்டலூரணி விலக்கு பகுதியில் ரோந்து பணியிலிருந்த, தூத்துக்குடி ஊரக நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், தலைமைக் காவலர் அருள் ஜோசப் ஆகியோர் நிறுத்த முயன்றனர். கார் நிற்காமல் சென்றதால், அதனை துரத்திச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jNDsaLB

Post a Comment

0 Comments