
வேலூர்: காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா பார்சலை கண்டறிந்த காவல் துறையினர் மோப்ப நாய் சிம்பா உதவியுடன் பேருந்தில் பதுங்கி இருந்த கஞ்சா கடத்தல் நபரையும் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டத்தின் வழியாக கஞ்சா கடத்தலை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஆந்திர மாநில எல்லையொட்டி உள்ள சேர்க்காடு, கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, சைனகுண்டா, பத்தலப்பல்லி சோதனைச்சாவடிகளில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/efyOzcX
0 Comments