
தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் அருகே கடலில் மிதந்த 160 கிலோ எடையுள்ள, ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு மற்றும் கடலோர காவல் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரையைச் சேர்ந்தவர் மீனவர் சோமசுந்தரம். இவர் தனக்கு சொந்தமான படகில், சக மீனவர்களுடன் இன்று (5-ம் தேதி)அதிகாலை, சுமார் 7 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது படகு அருகே 5 மூட்டைகள் தண்ணீரில் மிதந்து உள்ளது. இதையடுத்து அந்த மூட்டைகளை தனது படகில் ஏற்றிக்கொண்டு மீனவர் சோமசுந்தரம் இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/spWbViL
0 Comments