
வேலூர்: வேலூரில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
வேலூர் மாவட்டம் அடுக்கம் பாறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுள்ள இளம்பெண், தனது ஆண் நண்பருடன் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ம் தேதி வேலூர் கோட்டை பூங்காவில் இரவு பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த 3 பேர் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அவரிடம் இருந்த தங்கச்சங்கிலி, பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை அபகரித்துச்சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/14hxoEA
0 Comments