
ராமநாதபுரம் அருகே மூக்கையூர் கடற்கரையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது சாயல்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(19). இவரை 19 வயது கல்லூரி மாணவி காதலித்துள்ளார். இவர்கள் மார்ச் 23-ம் தேதி ராமநாதபுரம் அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர். அப்பகுதியில் சுற்றித் திரிந்த 3 இளைஞர்கள் காதல் ஜோடியை மிரட்டி நகை, பணம், மொபைல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டனர். பின்னர், ஹரிகிருஷ்ணனை தாக்கி, துப் பட்டாவால் கட்டிப்போட்டு விட்டு, மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/suAdGjr
0 Comments