
ஈரோடு: மடிக்கணினிக்கு பதிலாக மரக்கட்டையை வைத்து, ஆன்லைன் நிறுவனத்தை ஏமாற்றி மோசடி செய்தது தொடர்பாக, கணவன் - மனைவி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (35). சேலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (32). ஆன்லைனில் பொருட்களை விற்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து மடிக்கணினி, கைக்கடிகாரம் என ரூ.44 ஆயிரத்து 900 மதிப்புள்ள பொருட்களை, பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் முறையில் கார்த்திக் ஆர்டர் செய்துள்ளார். இதன்படி அந்த நிறுவன ஊழியர் நவீன் கடந்த வாரம் இந்த பொருட்களை அவர்களது வீட்டில் டெலிவரி செய்துள்ளார். கார்த்திக் - ராதிகாதம்பதி, பொருட்களை வீட்டிற்கு உள்ளே எடுத்துச் சென்றுவிட்டு, பணம் தராமல் ஊழியரைக் காக்க வைத்துள்ளனர். அதன்பின்னர், ஒரு பொருளுக்கான தொகையாக ரூ.564 மட்டும் செலுத்தி விட்டு, மற்ற இரு பொருட்களை திருப்பி அனுப்புவதாகக் கூறி, அவரிடம் இரு பார்சல்களை ஒப்படைத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UuxjTAw
0 Comments