
வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் தனிப்படை காவலரின் மணல் கடத்தல் தொடர்பான செல்போன் உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் தனிப்படை காவலர்களின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக புகாருக்கு உள்ளாகி வருகிறது. தனிப்படையில் செயல்படும் சிலர் கஞ்சா, மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம், குட்கா விற்பனை என சட்ட விரோத நடவடிக்கையில் நேரடி தொடர்பில் இருந்து வருவதாக வேலூர் காவல் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி பேச்சு எழுந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cd8Vzhj
0 Comments