
கடலூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள், மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை நாளன்று அந்த அறையின் சாவி தொலைந்து விட்டதாகக் கூறி, பூட்டைஉடைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hALg9S7
0 Comments