
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரையில் காதல் ஜோடியிடம் நகையை பறித்து விட்டு இளம்பெண்ணி டம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 2 பேரை பிடிக்கச் சென்ற சார்பு ஆய்வாளர், தலைமைக் காவ லருக்கு வாள் வெட்டு விழுந்தது.
காயமடைந்த போலீஸார். மூக்கையூர் துறைமுகக் கடற் கரைப் பகுதியில், கடந்த 23-ம்தேதி அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி(21), அவரது காதலர் ஹரிகிருஷ்ணனுடன் சுற்றுலா சென்றார். அப்போது கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த மூன்று பேர் காதல் ஜோடியை மிரட்டி நகை, மொபைல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு, அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XRcTwAm
0 Comments