Crime

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து மயக்க நிலையில் உள்ள பெண்களிடம் பாலியல் சீண்டல் மற்றும் திருட்டு சம்பவங்கள் நடப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில், விருத்தாசலம் அதன்சுற்று வட்டார பகுதியில் உள்ளகருவேப்பிலங்குறிச்சி, கண்டப்பங் குறிச்சி, பூவனூர், பரவளூர், விஜய மாநகரம், சித்தூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைப்பெற வருகின்றனர். சிலர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படு கின்றனர். இதில், அறுவை சிகிச் சைக்குட்படுத்தப்பட்டு மயக்க நிலையில் இருக்கும் பெண் நோயாளிகளை குறிவைத்து மர்ம நபர் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர். அவர்களின் செல்போன்களையும் மர்மநபர்கள் பறித்துச் செல்வதாக கலியமூர்த்தி என்ற நோயாளி வேதனையோடு தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UOr7Pec

Post a Comment

0 Comments