Crime

விவசாயி வைத்த அடமான நகையின் எடை குறைந்ததாக எழுந்த புகாரில், நகையின் கண்ணிகளை (இணைப்புகள்) நூதனமாக திருடிய கேத்தனூர் வங்கிக் கிளையின் நகை மதிப்பீட்டாளரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கேத்தனூரில், பாரத ஸ்டேட் வங்கிக் கிளை உள்ளது. கடந்த மே மாதம் விவசாயி கோவிந்தராஜ் (52)வீட்டில் இருந்த தங்க நகையை அடமானம் வைத்து ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி பணத்தை செலுத்தி நகையை திருப்பி உள்ளார். அப்போது நகையைப் பரிசோதித்த போது, நகையின் கண்ணிகள் (இணைப்புகள்) குறைவாக இருந்ததால், எடை குறைந்ததைக் கண்டறிந்தார். இது தொடர்பாக வங்கியை முற்றுகையிட்டு, காமநாயக்கன்பாளையம் போலீஸாரிடம் புகார் அளித்தார். கேத்தனூர் வங்கிக் கிளையில் தங்களது நகைகளை அடமானம்வைத்திருந்த விவசாயிகள் பலரும்,கடந்த 4 நாட்களாக வங்கியை முற்றுகையிட்டனர். மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PsT9OCw

Post a Comment

0 Comments