
தூத்துக்குடி: துபாயில் இருந்து பேரீச்சம்பழப் பெட்டிகளுக்கு நடுவே பதுக்கிவைத்து கொண்டுவரப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்பிலான சிகரெட்களை, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வழியாக அவ்வப்போது செம்மரக்கட்டைகள், போதை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இருந்து தூத்துக்குடிக்கு வரி ஏய்ப்பு செய்யும் வகையில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக பெங்களூருவைச் சேர்ந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/laYoy7Z
0 Comments