
கோவை: கோவையைச் சேந்த 16 வயது சிறுமி, கன்னியாகுமரியைச் சேர்ந்த 19 வயது இளன் பெண் ஆகியோரை கடத்தி தலைமறைவான ஆசிரியரை 8 மாத தேடுதல் வேட்டைக்கு பின்னர் தனிப்படை காவல்துறையினர் திருப்பதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள, கெங்கவள்ளியைச் சேர்ந்தவர் மணிமாறன்(40). இவர், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஒழுங்கீன நடவடிக்கையின் காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மணிமாறன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வந்து தங்கிய மணிமாறன், அப்பகுதியில் உள்ள மக்களிடம், தான் ஒரு ஆசிரியர் என்றும், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு டியூசன் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pzx7f6i
0 Comments