
கோவை: ஆசிரம உரிமையாளரை கடத்தி ரூ.35 லட்சம் பறித்த மர்ம நபர்கள் யாரென போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கோவை தீத்திப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன்(46). இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், பேரூர் போலீஸில் சரவணன் நேற்று புகார் அளித்தார். அதில்,‘‘ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஆசிரமம் நடத்தி வருகிறேன். கடந்த 6-ம் தேதி குடும்பத்தினரைப் பார்க்க கோவைக்கு வந்தேன். 8-ம் தேதி வீடு அருகே நான் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வாகனத்தில் வந்த 5 பேர் என்னை தடுத்து நிறுத்தினர். தாங்கள் போலீஸார், விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி என்னை அழைத்துச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/puOcqIR
0 Comments