
கமுதி அருகே அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை போலீஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கொட்டகுடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அபிராமம் அருகே பள்ளபச்சேரியை சேர்ந்த ஆதி முத்தமிழ்ச்செல்வன் (43) இரண்டாம் நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் பலரை தனியாக அழைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wzjNgnl
0 Comments