
மதம் மாற எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் திருமணம் செய்த இளைஞரின் தந்தையை கொல்ல திட்டமிட்ட 5 பேர் அடங்கிய கூலிப்படையினரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் குமரேசன். நகைப் பட்டறை வைத்துள்ளார். இவரது மகன் அருண்குமார்(27), ஹைதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரும், அதே நகரில் பணியாற்றிவந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹானா ஆன்மிகா என்பவரும் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கோவை செல்வபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், சஹானா ஆன்மிகா கணவரின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W6Lho8w
0 Comments