
வேலூர்: ஆட்டோவில் பயணித்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் 4 பேரை காவல் துறை யினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் கடந்த 16-ம் தேதி நள்ளிரவு தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர், தனது ஆண் நண்பருடன் திரைப்படம் பார்த்து விட்டு ஷேர் ஆட்டோவில் வேலூருக்கு பயணித்துள்ளார். அந்த ஆட்டோவில் இருந்த 4 பேரும் பயணிகள் என அதன் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வழியாக வேலூருக்குச் செல்லாமல் சத்து வாச்சாரி நோக்கி திரும்பியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XUyurw8
0 Comments