
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சென்ற லாரியில் கடத்திவரப்பட்ட 215 கிலோ கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்து இருவரை நுண்ணறிவு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கஞ்சா கடத்தல், விற்பனையை தடுக்க தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கஞ்சா கடத்திச்செல்வதாக திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/b8QJyEc
0 Comments