
புதுச்சேரியில் மருந்தாளுநரிடம் 12 பவுன் நகைகளை திருடியதாக தமிழக காவல்துறைக்கு தேர்வான பெண்ணை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
செஞ்சி ஆலம்பூண்டி குளக் கரை வீதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மனைவி மாதவி (42). புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளு நராகப் பணியாற்றி வருகிறார். இதற்காக புதுச்சேரி கொசப் பாளையம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தங்கி வேலைக்குச் சென்று வந்தார். கடந்த 18-ம் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக வீட்டிலிருந்து 12 பவுன் நகைகளை அணிந்துகொண்டு புதுச்சேரி வந்தார். நிகழ்வில் பங்கேற்று விட்டு, நேற்று முன்தினம் நகைகளை மகளிர் விடுதியில் உள்ள தனது அறையின் பாதுகாப்பு பெட்டியில் வைத்துவிட்டு வேலைக்குச்சென்றுவிட்டார். இரவு திரும்பி வந்து பார்த்தபோது நகைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FXNA8Tj
0 Comments