
திருவண்ணாமலை ஒருங் கிணைந்த நீதிமன்றத்தில், ஜாமீன் கிடைக்காததால் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீழ் செட்டிப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் எல்லப்பன்(53), ராஜா (35), பட்டுசாமி(24) மற்றும் பாலச்சந்தர்(22). இவர்கள் 4 பேர் மீதும், அதே கிராமத்தில் வசிக்கும் ஜீவா மனைவி பரிமளா என்பவர், தகராறு தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் கொடுத்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HufLXsY
0 Comments