
ஆம்புலன்ஸ் மூலம் கேரளாவுக்கு கஞ்சா கடத்திய வழக்கில், இளைஞர்கள் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் பலகோடிரூபாய் மதிப்புடைய கஞ்சாவை கடத்துவதாக கோவை போதைப் பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில், கடந்த 2019 அக்டோபர் 22-ம் தேதி உடுமலையிலிருந்து கேரளாவுக்கு சென்ற ஆம்புலன்ஸை, உடுமலை மின்மயானம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதில் சோதனை செய்தபோது 240 கிலோ எடையுள்ள கஞ்சா மூட் டைகள் இருந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8TiW9EQ
0 Comments