
சமூக நலத்துறையில் மதிய உணவு திட்டத்தின் இணை இயக்குநராக இருப்பவர் ரேவதி.
இவர், தனக்கு கீழ் பணிபுரியும் மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் மற்றும் சத்துணவு ஊட்டச்சத்து மாவட்ட திட்ட அதிகாரிகளுக்கு எதிராக போலியான லஞ்ச புகாரை உருவாக்கி, அந்தப் புகார் தலைமை அலுவலகத்துக்கு வந்திருப்பதாகக் கூறி, அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இணை இயக்குநரின் மிரட்டலை தொடர்ந்து, சேலம், திருநெல்வேலி மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் தலா 3 லட்சம் கொடுத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UEGkBMe
0 Comments