
தேனி மாவட்டம், குமணன்தொழு அருகே தளிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(65). விவசாயி. இவரது மனைவி அம்சக்கொடி(57). இருவரும் தோட்டத்து வீட்டில் குடியிருந்தனர். கணேசனுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இந்நிலையில், கடந்த 31-ம் தேதி ஏற்பட்ட தகராறில் அம்சக்கொடியை கணேசன் கட்டையால் தாக்கி கொலை செய்தார். பின்னர், அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி வைத்து விட்டார்.
பின்னர் உறவினர்களிடம் தனது மனைவி காணாமல் போய்விட்டதாகக் கூறி வந்தார். நேற்று அவரது உடலை புதைக்க முயன்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WktJ71E
0 Comments