
விருதுநகர்: விருதுநகரில் ஒரு வயது பெண் குழந்தையை ரூ.2.30 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டியைச் சேர்ந்தர் கலைச்செல்வி (25). கணவனை இழந்து இவர் தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே, கலைச்செல்வியின் குழந்தை திடீரென மாயமனதாக கூறப்படும் நிலையில், அக்கம்பக்கத்தில் உடனடியாக சந்தேகத்தின் பேரில் சைல்டு லைன் 1098-க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். அதையடுத்து விஏஓ சுப்புலட்சுமி மற்றும் சூலக்கரை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கலைச் செல்வியிடம் விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Mwq1kac
0 Comments