
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் திமுக வட்டச்செயலாளர் பொன்னுதாஸ் என்ற அபேமணி(38) கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்பட்டுவந்த வழக்கறிஞர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பாளையங்கோட்டை தெற்கு பஜார் உச்சினி மாகாளியம்மன் கோயில் தெருவைசேர்ந்த பொன்னுதாஸ், 35-வது வட்ட திமுகசெயலாளராக இருந்தார். கடந்த 2 நாட்களுக்குமுன் இரவில் தனது வீட்டருகே பைக்கில் சென்று கொண்டிருந்த அவரை காரில் வந்த ஒரு கும்பல் வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YnVsBxjJ0
0 Comments