
வேலூர் கொணவட்டம் பெரிய மசூதி, கரீம் சாயுபு தெருவைச் சேர்ந்தவர் ஆயிஷா (29). இவர், தனது தாய் மற்றும் மகனுடன் நேற்று காலை வீட்டில் இருந்தபோது, குறி சொல்வது போல் வந்த ஒரு மர்ம நபர், ஆயிஷாவிடம் ‘உன்னுடைய மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தோஷம் கழிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
மகனின் உயிருக்கு ஆபத்து என்று கேட்டதும் அதிர்ச்சியடைந்த ஆயிஷாவிடம், தோஷம் கழிக்க உன் கையில் இருக்கும் நகைகளை கழற்றி கொடுக்குமாறு அவர்கூறியுள்ளார். இதையடுத்து ஆயிஷா தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுத்துள் ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3HG7aTk
0 Comments