Crime

அரசுப்பணியில் சேர்ந்து ஒன்றரை வருடத்தில் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நில அளவையர் வீட்டில் விடிய, விடிய நடந்த சோதனையில் கணக்கில் வராதப் பணம் ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் சேண் பாக்கம் கழனிக்காட்டு தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (35). இவரது தந்தை நில அளவை யாராக பணியாற்றி வந்த போது கடந்த 2017-ம் ஆண்டு பணியின் போது உயிரிழந்தார். இதையடுத்து, பாலாஜிக்கு கருணை அடிப்படையில் நில அளவை யாராக பணி ஆணை வழங்கப் பட்டது. ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை யாராக பணியாற்றி வந்த பாலாஜி நிலத்தை அளந்து பிரித்து பதிவு செய்ய பலரிடம் லஞ்சப்பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. பணியில் சேர்ந்ததும் லஞ்சம் பெறும் பழக்கத்தை பாலாஜி ஏற்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/o8dhzSXMm

Post a Comment

0 Comments