
பள்ளி மாணவ, மாணவிகளை வற்புறுத்தி கழிவறையை கழுவ வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் அருகே இடுவாய் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை நேற்று கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் அருகே உள்ள இடுவாய்அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இடுவம்பாளையத்தை சேர்ந்த கீதா (45)என்பவர் பணியாற்றி வந்தார். இவர், மாணவ, மாணவிகளைதரக்குறைவாகவும், சாதிப்பெயரைகுறிப்பிட்டு பேசியதாகவும்,பள்ளியில் உள்ள கழிவறைகளைஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களைக் கொண்டு கழுவ வைத்ததாகவும் முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷூக்கு, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியை கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fGuAMr
0 Comments