Crime

காஞ்சிபுரத்தில் பிரபல தாதாவாக வலம் வந்தவர் ஸ்ரீதர். இவர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இவரது கார் ஓட்டுநரான தினேஷ் ஒரு குழுவாகவும், அவரது மைத்துனர் தனிகா ஒருகுழுவாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களுக்குள் ஸ்ரீதரின் இடத்தைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனால் இவர்கள் அணிகளுக்குள் மாறி, மாறி கொலைகளை செய்து வருகின்றனர். மேலும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர். இதில் தினேஷின் வலதுகரமாக செயல்பட்டு வந்தவர் பொய்யாகுளம் தியாகு. இவர் காவல்துறையின் நெருக்கடியால் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படையினர் பொய்யாகுளம் தியாகுவைப் பிடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nMNeGV

Post a Comment

0 Comments