Crime

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் 3-வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் முத்தாலு (60). இவர் கடந்தாண்டு நவம் பர் 13-ம் தேதி வீட்டு வாசலில் தனது பேத்திக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது முகவரி கேட்பது போல் வந்த மர்மநபர், அவரது கழுத்தில் அணிந்தி ருந்த 3.5 பவுன் செயினை பறித்துக் கொண்டு சென்றார். இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி-விழுப்புரம் பிரதான சாலையில் மூலகுளம் அருகில் நேற்று ரெட்டி யார்பாளையம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் பைக்கில் வந்த நபரை மடக்கி, சோதனை செய்ததில் அவரிடம் போலியான நம்பர் பிளேட்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீஸார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RKNDcmY95

Post a Comment

0 Comments