
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கூளாப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரதுமனைவி விஜயலட்சுமி (32). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் விஜயலட்சுமிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய முயன்றபோது விஜயலட்சுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து விஜயலட்சுமியை அங்கிருந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விஜயலட்சுமி உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wj8VUSBbX
0 Comments