
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே ரயில்வே அதிகாரி விபத்தில் இறந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அவரை காரை ஏற்றி கொலை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்தவர் நா.செந்தாமரைக் கண்ணன் (56). இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி ரயில் நிலைய கண்காணிப்பாளராக வேலை பார்த்தார். கடந்த 16.1.2022 அன்று இரவு பணி முடிந்து வீடு திரும்பும் போது திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலையில் கால்வாய் கிராமம் அருகே பின்னால் வந்த கார், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://bit.ly/3r66Jfz
0 Comments