Crime

கோவையில் வீட்டிலிருந்து எடுத்த ரூ.21 லட்சம் தொகை, 22 பவுன் நகையுடன் மாயமான சிறுவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியருக்கு 14 வயதில் மகன் உள்ளார். இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 30-ம் தேதி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர், இருவரும் வீடு திரும்பவில்லை. இருவரது பெற்றோரும் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32SOsZo

Post a Comment

0 Comments