
சென்னை, கொளத்தூர் பகுதியில் வசிப்பவர் வனஜா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில், கடந்த 2013-ம் ஆண்டு பள்ளி மாணவியாக இருந்தபோது, புத்தகரம் திருமால் நகர் பகுதியில் இயங்கி வரும் ஆசிரமத்துக்கு உடல் நிலை சரியில்லாத எனது தாயாருக்கு விபூதி வாங்க சென்றேன். அப்போது ஆசிரமத்தை நடத்தி வந்த கொளத்தூர், விநாயகபுரத்தைச் சேர்ந்த சங்கர நாராயணன் (48) என்பவர், அவரது மனைவி புஷ்பலதா (43)உதவியுடன் எனக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தார். நான் மயங்கிய நிலையில் இருந்தபோது சங்கர நாராயணன் பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து நிர்வாண படங்களையும் எடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yFPpQS
0 Comments