Crime

வேலூர்: வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 14-ம் தேதி சுவரை துளையிட்டு 16 கிலோ நகைகள் திருடப்பட்டன. இவ்வழக்கில், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டீக்காராமன் (27) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒடுக்கத்தூர் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியது: கட்டிட தொழிலாளியான டீக்காராமன் திருட்டில் ஈடுபடுவதற்காக 3 மாதங்களுக்கு முன்பு ‘சத்தமில்லாமல் சுவரில் துளையிடுவது எப்படி’ என்று யூடியூபில் பல வீடியோக்களை பார்த்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Ej9gGJ

Post a Comment

0 Comments