
அரக்கோணம் அருகே நள்ளிரவில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு 15 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்கரன் (23). இவரது வீடு அங்குள்ள விவசாய நிலத்தில் தனியாக உள்ளது. வீட்டில் தாய் சுதா (52), பெரியம்மா லதா (56), பாட்டி ரஞ்சிதம்மாள் (76) ஆகியோர் உள்ளனர். விவசாய நிலத்தில் தனியாக இருப்பதால் பாதுகாப்புக்காக விலை உயர்ந்த வகையைச் சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EazniM
0 Comments