
ஆன்லைன் வர்த்தகம் மூலம் விவசாயியிடம் ரூ.4.38 லட்சம் மோசடி செய்தவர்களை தேனி சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டி மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்த விவசாயி மோகன்சந்த் (55). இவர் ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட சமூகவலைதளம் ஒன்றை தொடர்பு கொண்டார். அப்போது பத்மபிரியா என்பவர், இவரைத் தொடர்பு கொண்டு ஒரு செயலியை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்ய கூறியுள்ளார். அதில் கூறியபடி ஆரம்பத்தில் சிறு பொருட்களை விற்பனை செய்தார். இதற்காக கமிஷன் தொகை வருவாயாக கிடைத்தது. இதை நம்பி பல தவணைகளில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அதன் பின் கமிஷன் தொகை வரவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qAdZ1T
0 Comments